மறு தேர்தல்..
அரசு அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, விஜய் புதன்கிழமை தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்களை சந்தித்தார். ஆனால், TVK-வின் ஆதரவு எண்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெளிவாகவில்லை என்றும், தற்போதைய எண்ணிக்கையில் ஆளுநர் முழுமையாக நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். அதில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தால், TVK-வின் பலம் 107 ஆக குறையும்.
இந்நிலையில், “ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தி மீண்டும் தேர்தல் நடத்துவது தான் சிறந்த தீர்வாக இருக்கலாம். இந்த முறை ‘வாக்குக்கு பணம்’ முறையை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்மையான மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது வெளிப்படும்,” என்று ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.