ஆசிரியர்களுக்கு வெளிநாடு சுற்றுலா
இவர்களுக்கு தமிழக அரசு சார்பாக விருதும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் இந்த தேர்வில் 75 சதவிகித மதிப்பெண் பெற்றவர்கள் உள்நாட்டிற்குள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதில் 90 % மதிப்பெண் பெற்ற 55 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். 34 தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் 22 உயர்நிலை மேல்நிலை பள்ளி என 54 ஆசிரியர்கள் தற்போது பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து வருகின்றனர். ஆசிரியர்களோடு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்றுள்ளார்.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சுப் புரட்சியின் நினைவாக கட்டப்பட்ட ஈஃபிள் கோபுரத்தை ஆசிரியர்கள் பார்வையிட்டனர். அவர்களோடு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் கலந்து கொண்டார்.