தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், ஜூன் 4 பள்ளி திறப்பு தேதி மீண்டும் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் குழந்தைகளின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு மேலும் ஒரு வாரம் ஒத்திவைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா என்ற கேள்வி தற்போது பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் தீவிரமாக பேசப்படுகிறது. இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகள் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு வழக்கத்தை விட நீண்ட கோடை விடுமுறை கிடைத்தது. முதலில் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக அரசு அதை மாற்றியது.
25
தமிழ்நாடு வெயில்
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக பல மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. சில இடங்களில் வெப்பக்காற்றும் வீசியதால் பொதுமக்கள் அசௌகரியத்தை சந்தித்து வருகின்றனர்.
35
மாணவர் விடுமுறை
இந்த சூழ்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிகள் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் குறையாமல் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெப்பம் தொடர்ந்து அதிகமாகவே பதிவாகி வருகிறது.
பகல் நேர வெப்பம் இரவு நேரத்திலும் உஷ்ணம் மற்றும் புழுக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடல்நல பாதிப்புகளை சந்திக்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் சூழலில் இந்த வெப்பம் கூடுதல் சவாலாக இருக்கும் என பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
55
பள்ளிகள் திறப்பு
இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலம் நெருங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் இன்று குறையாததால் பள்ளிகள் திறப்பு மேலும் ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதனால் அரசு மீண்டும் பரிசீலனை மேற்கொண்டு புதிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.