இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் நாளை தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே தீபாவளி காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை கிடைத்தது. இப்போது மழை காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.