மேலும் விசாரித்ததில் ஷோபனாவின் கணவர் கார்த்திக் சுரேஷ் அறிமுகப்படுத்திய நபரான பியூஷ் என்ற நபரைத் தொடர்பு கொண்டு ஆன்லைன் கேமிங் தொழிலில் ஈடுபட்டால் பியூஷ் வருமானத்தில் 2% லாபம் தருவதாக உறுதியளித்தார். மேலும், கார்த்திக்கிடம் வங்கிக் கணக்கைத் திறந்து, நெட் பேங்கிங்கை அமைத்து உள்நுழைவுச் சான்றுகள்,
மின்னஞ்சல் ஐடி, மொபைல் போன் மற்றும் சிம் கார்டு ஆகியவற்றை ஒப்படைக்கச் சொன்னார். பியூஷ், கார்த்திக்கை லக்னோவில் சந்திக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.கார்த்திக் மாற்றுத்திறனாளி என்பதால், அவர் தனது மனைவியின் மூத்த சகோதரர் பிரபுவிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார்.