Sivakasi: சீனாவுக்கு சவால் விடும் சிவகாசி! உலக பட்டாசு ஹப்பாக மாற்ற தமிழக அரசு அசத்தல் திட்டம்!

Published : Jun 30, 2026, 08:24 AM IST

Sivakasi Fireworks: இந்தியாவின் 90% பட்டாசுகளை உற்பத்தி செய்யும் சிவகாசியை உலக பட்டாசு மையமாக மாற்ற தமிழக அரசு புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

PREV
14
சிவகாசியில் வரப்போகும் மாற்றம்

இந்தியாவில் தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சிவகாசி பட்டாசுகள்தான். நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் சுமார் 90 சதவீத பங்களிப்பை வழங்கும் இந்த நகரம், இப்போது உலக சந்தையையும் குறிவைத்துள்ளது. சிவகாசியை பாதுகாப்பான, நவீன மற்றும் உலகத் தரம் வாய்ந்த பட்டாசு உற்பத்தி மையமாக மாற்ற தமிழக அரசு புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் சீனாவின் ஆதிக்கத்திற்கு சவால் விடுப்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. தற்போது சிவகாசியில் 1,200-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

24
உலக பட்டாசு மையமாக மாறும் சிவகாசி

இந்தத் துறையின் ஆண்டு மதிப்பு சுமார் ₹6,000 கோடி என மதிப்பிடப்படுகிறது. இருப்பினும், உலக பட்டாசு ஏற்றுமதியில் சீனாவே முன்னணியில் உள்ளது. குறிப்பாக லியுயாங் நகரம் மட்டுமே உலக ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. கப்பல் போக்குவரத்து வசதிகள் மற்றும் சர்வதேச சரக்கு அனுப்பும் கட்டமைப்பில் சீனாவின் வலிமை, இந்திய நிறுவனங்களுக்கு கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் சில வேதிப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட உச்சநீதிமன்ற கட்டுப்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் தொழில்துறைக்கு சவாலாக உள்ளன.

34
பட்டாசு ஏற்றுமதி

மேலும், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. குறிப்பாக தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகியுள்ளது. இந்த நிலையில், ஏற்றுமதியை அதிகரிப்பதோடு பாதுகாப்பான மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த தொழில்துறையை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் முதலீடு செய்ய, தொழிலாளர் நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
சிவகாசி பட்டாசுகள்

சிவகாசி உலக பட்டாசு சந்தையில் புதிய இடத்தைப் பிடிக்க வேண்டுமெனில் உற்பத்தி, தரம், பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி திறனும் ஒருங்கிணைந்து வளர வேண்டும். இந்த முயற்சிகள் வெற்றியடைந்தால், இந்தியாவின் பட்டாசு தொழிலுக்கு உலக அரங்கில் புதிய அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories