Published : Jul 04, 2026, 06:07 AM ISTUpdated : Jul 04, 2026, 06:12 AM IST
Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக அரசு குட்நியூஸ் சொல்லியுள்ளது. இனி பட்டா தேடி வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்லது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
தமிழக வருவாய்த் துறையைப் பொறுத்தவரை நில உரிமையாளரின் சொத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக கருதப்படும் பட்டாவினை விரைந்து வழங்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் முடிவுற்றதும், விற்பனை செய்பவரின் பெயர். புல எண் மற்றும் பரப்பளவு ஆகியவை இணையதள பட்டாவில் உள்ள பெயர் மற்றும் இதர விவரங்களோடு ஒன்றாக இருந்து, வில்லங்கங்கள் ஏதும் அந்தச் சொத்தின்மீது இல்லாதிருப்பின் அதனை வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில் இணையதள வழியில் பட்டா மாறுதல் (Auto-mutation) செய்து தரப்படுகிறது.
சில தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த நடைமுறையில் இடர்ப்பாடுகள் உள்ளதை அறிந்த தமிழக முதல்வர் விஜய் இவற்றை உடனடியாக களைந்து, உட்பிரிவு இல்லாத சொத்தை வாங்கியவரின் பெயருக்கு தானியங்கி பட்டா மாறுதல் சேவை அளிக்க அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் துறைரீதியான கூட்டம் நேற்று (ஜூலை 3) நடைபெற்றது.
24
என்னென்ன மாறுதல்?
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு ஏற்ப, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் கீழ்க்காணும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுவரை நிலத்தினை விற்பனை செய்யும் போது. விற்பனையாளரின் மனைவி மற்றும் மகன் /மகள் போன்ற குடும்ப உறுப்பினர்களும் கையொப்பமிடும் (Co-Sign) பட்சத்தில் இச்சேவையினை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இனிமேல் நிலத்தினை விற்பனை செய்யும் போது, நில உரிமையாளர் (பட்டாதாரர்) மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் /மகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கையொப்பமிடும் (Co-Sign)நிகழ்வுகளிலும் இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.
Press Statement of Hon’ble Minister for Revenue and Disaster Management on “Simplification of online Patta Transfer not Involving Subdivisions – Auto-mutation”#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |@imrajmohan | @KASengottaiyan | pic.twitter.com/wYDkRORCjf
— TN DIPR (@TNDIPRNEWS) July 3, 2026
34
நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்
மேலும் நிலத்தினை விற்பனை செய்யும் நபர் பொது அதிகார பத்திர முகவர் (Power of Attorney) மூலம் பத்திரப்பதிவு செய்யும் போது நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயரானது பட்டாதாரரின் பெயருடன் பொருந்தாமல் இருப்பதனால் இச்சேவையினை பயன்படுத்த இயலவில்லை. இனிமேல் ஒரு பட்டாதாரர் நிலத்தினை பொது அதிகார பத்திர முகவர் (Power of Attorney) மூலமாக பத்திரப்பதிவு செய்யும் போது, நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயருக்கும். பட்டாதாரரின் பெயருக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும், செல்லத்தக்க பொது அதிகார முகவர் (valid Power of Attorney) என்பதன் அடிப்படையில் தற்போது இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.
முன்பு நிலத்தினை வாங்குபவருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் உள்ளதா என்பதனை கண்டறிந்து, புதியதாக வாங்கிய நிலத்தின் புல எண் அந்த பழைய பட்டாவில் சார்பதிவாளர் அவர்களால் சேர்க்கப்படும். இனிமேல் நிலத்தை வாங்கும் நபருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்கு தானாகவே கடைசி பட்டா எண்ணிற்கு அடுத்த பட்டா எண் ஒதுக்க வழிவகை செய்யப்படும். இதன் மூலம் காலவிரயம் குறையும்.
தமிழக அசரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையின்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 15 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உட்பிரிவு அல்லாத இனங்களில் தானியங்கி முறையில் (Auto-mutation) பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும். இதனால் பொதுமக்கள் நிலத்தினை பதிவு செய்த பிறகு பட்டா மாறுதல் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ, வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ நேரில் செல்லும் நிலை தவிர்க்கப்படும்.