CM Vijay : எம்.எல்.ஏ.க்களுக்கு கார்... மாதம் ரூ.75,000 வாகனப்படி - சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

Published : Aug 19, 2026, 12:06 PM IST

New Car for Tamil Nadu MLA's : தமிழ்நாடு எம்.எல்.ஏ-க்கள் இனி தொகுதிப் பணிகளுக்காக சுலபமாக பயணிக்க, அனைவருக்கும் புதிய கார்கள் வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.

PREV
15
New Car for Tamil Nadu MLAs

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ளும் வகையில், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், வாகனத்தை இயக்குதல் மற்றும் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாகவும், உதவியாளர் ஒருவரை நியமித்துக் கொள்ள ரூ.25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று 110-வது விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

Maternity Leave: 3-வது குழந்தைக்கும் 1 வருஷ லீவு! அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு

25
எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையைத் தொடர்ந்து அறிவிப்பு

கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி சட்டப்பேரவையில் பேசும்போது, பல சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொந்தமாக வாகனம் இல்லாததால் தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்கள் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், உறுப்பினர்களின் அடிப்படைத் தேவைகளை அரசு பூர்த்தி செய்வதன் மூலம், அவர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் மக்கள் பணியாற்றுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

35
தொகுதி பணிகளுக்கு அரசு வாகனம்

பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இல்லாத உறுப்பினர்களும், முதல் முறையாக சட்டமன்றத்துக்குத் தேர்வாகியுள்ள உறுப்பினர்களும் தங்களது மக்கள் பணியை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் அவர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கும் எளிதாகச் சென்று மக்களை நேரடியாக சந்திக்க முடியும் என்றும் அவர் கூறினார். வாகன வசதி கிடைப்பதால் பயணத்திற்காக பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை குறையும். இதன் மூலம் உறுப்பினர்கள் சுயமாகவும், எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காமலும் தொகுதி பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

45
மாதம் ரூ.75,000 வாகனப்படி

அரசு வழங்கும் வாகனத்திற்கான ஓட்டுநர் சம்பளம், எரிபொருள், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்கும் வகையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனம் தொடர்பான அத்தியாவசிய செலவுகளை உறுப்பினர்கள் மேற்கொள்ள முடியும். தொகுதி சார்ந்த பணிகள் மற்றும் அலுவலக நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளர் ஒருவர் தேவைப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார். இதற்காக ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ளும் வகையில், மாதந்தோறும் ரூ.25,000 உதவியாளர் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனப்படி மற்றும் உதவியாளர் படியாக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு மாதந்தோறும் மொத்தம் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

55
சட்டத் திருத்தம் செய்து அரசாணை

இந்த புதிய நடைமுறையை செயல்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின்னர் உரிய அரசாணைகள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம் சட்டமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பொருளாதாரச் சுமை குறைவதுடன், அவர்கள் மக்களை நேரடியாக அணுகி தொகுதி பிரச்சினைகளை விரைவாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நன்றி தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்களின் தொகுதி பணிகளுக்கு இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும் எனவும் அவர் பாராட்டினார்

Read more Photos on
click me!

Recommended Stories