தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை வழங்குகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் தங்கத்தின் தரம் அறிதல், ஹால்மார்க், போலி நகைகளை கண்டறிதல் போன்றவை கற்றுத்தரப்படும்.
தமிழக அரசு பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனங்கள் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியானது 27.10.2025 to 31.10.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, இந்நிறுவன வளாகத்தில் நடைபெறும்.
24
பயிற்சியின் உள்ளடக்கம்
இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதல். கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை. எடை அளவு இணைப்பான். விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate). ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும். மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள். தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்.
34
வேலைவாய்ப்பு வழிகாட்டல்
பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள், அவற்றை பெறும் நடைமுறைகள்.
அரசுத் திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சியில் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் எனவும் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண். பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம்.
மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு www.editn.in அல்லது 9840114680/9360221280 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்புகொள்ளலாம். முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032.