உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் வருகிற 17 ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளார். தங்கள் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கும், மாவட்டம் முழுவதையும் தயார்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.