சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு

Published : Nov 12, 2024, 07:23 AM ISTUpdated : Nov 12, 2024, 07:30 AM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
13
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு
Tamil Nadu Rains

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிரடியாக தொடங்கியதையடுத்து, பல இடங்களில் மழையானது கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

23
school holiday

இரவில் கொட்டித்தீர்த்த மழை

இதன் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. 

33
School holiday

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து இடி மின்னலோடு மழை பெய்து வருகிறது. மழையானது இன்று காலையும் தொடர்ந்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுமா என கேள்வி எழுந்தது.

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னதாக  வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில் இன்று (12.11.2024)அனைத்து  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்  வழக்கம்போல் செயல்படும்  என தெரிவித்திருந்தார். தற்போது அந்த உத்தரவு மாற்றப்பட்டு சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories