15 நாட்களில் ரேஷன் கார்டு
இதனிடையே புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் எப்போது கிடைக்கும் என்ற நிலை இருந்தது தற்போது புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் தகுந்த ஆவணங்கள் இருந்தால் 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு மாதம் 8,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கி வந்த மத்திய அரசு, தற்போது 17,100 மெட்ரிக் டன் அளவிற்கு உயர்த்தி வழங்கி உள்ளதாக என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இந்தநிலையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் https://www.tnpds.gov.in/ என்ற உணவு பொருட்கள் வழங்கல் துறையின் இணையதள பக்கத்திற்கு சென்று புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பிக்கலாம். புதிய மின்னு அட்டை விண்ணப்பிக் என்ற காலத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் குடும்ப தலைவர், உறவினர்கள், இருப்பிட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும்.