விமான சாகச நிகழ்ச்சி : கூட்ட நெரிசலில் சிக்கிய 230 பேருக்கு மயக்கம் - மூவர் உயிரிழந்த பரிதாபம்!

First Published Oct 6, 2024, 8:33 PM IST

Chennai Airshow : இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 72 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் முறையில் இன்று விமானப்படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Chennai Air Show

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சி இன்று அரங்கேறியது. நமது நாட்டின் பாதுகாப்பு பணியில் இருக்கும் சக்தி வாய்ந்த அதி நவீன போர் விமானங்கள் பல இந்த கண்காட்சியில் பங்கேற்றது. குறிப்பாக அதிவேக ஜெட் விமானமாக இருந்து வரும் ரஃபேல் மற்றும் தேஜஸ் உள்ளிட்ட போர் விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல் 70-க்கும் மேற்பட்ட இந்திய நாட்டின் போர் விமானங்கள் வானில் சாகசங்கள் காட்டி அசத்தியது பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி துறை அதிரடி அறிவிப்பு

Air Show

மேலும் இன்று நடைபெற்ற இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை சென்னையில் சுமார் 10 லட்சம் பேர் கண்டு களித்ததாக சில தரவுகள் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் மக்கள் இந்த விமான சாகசங்களை பார்க்க கூடியதாகவும். மெரினா சாலை மற்றும் பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 லட்சம் பேர் ஒன்று கூடி இந்த விமான சாகச நிகழ்ச்சியை கண்டு களித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் எதிர்பார்த்ததை விட பல லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குழுமிய நிலையில் மிகப்பெரிய அளவிலான கூட்ட நெரிசல்கள் இந்த சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்டுள்ளது. இதனால் சில அசம்பாவிதங்களும் இப்போது சென்னையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos


Chennai Air Show

சென்னையில் பல ஆண்டுகள் கழித்து இந்த விமான கண்காட்சி நிகழ்கின்றது என்பதனால் இந்த அற்புத நிகழ்வை காண பல லட்சம் மக்கள் இன்று மெரினாவில் ஒன்று கூடினர். இதனால் சென்னையின் பல சாலைகள் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. அது மட்டுமல்லாமல் பொது போக்குவரத்துகளாக திகழும் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சென்னை புறநகர் மின்சார ரயில் உள்ளிட்டவை மிகப்பெரிய அளவில் கூட்டங்கள் நிரம்பி வழிந்தது. சில இடங்களில் ரயில்களை தொடர்ச்சியாக இயக்க முடியாத நிலை கூட ஏற்பட்டது. இந்த சூழலில் இன்று ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 200க்கும் அதிகமான நபர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும். அதில் தற்பொழுது 93 பேர் ஓமாந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Chennai traffic jam

லிமிகா சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்வு இப்பொழுது இடம் பெற்றிருக்கிறது. சென்னையே வியக்கும் அளவிற்கு இந்த விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது என்று பல சிறப்பான விஷயங்கள் இதில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 93 பேர் மயக்கமடைந்து ஓமாந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நீர்ச்சத்து குறைபாட்டால் சுமார் 230 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் உச்சபட்ச சோகமாக விமான சாகச நிகழ்ச்சிகளை காண வந்த மூவர் மயக்கம் அடைந்த நிலையில் தற்போது அவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Air Show: மெரினா கடற்கரையில் கடல் அலையை மிஞ்சும் மக்கள் அலை! ஸ்தம்பித்த மின்சார ரயில், மெட்ரோ ரயில் நிலையம்!

click me!