சூப்பர் திட்டம்.! மாணவர்களுக்கு 25ஆயிரம் ஊக்கத்தொகை.! விண்ணப்பிக்க அழைப்பு- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

First Published Jul 19, 2024, 2:58 PM IST

யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு  25,000 ரூபாய் பெறுவதற்கு விண்ணிப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
 

college student

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவரா.?

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு  ஊக்கத்தொகைத் வழங்குவது தொடர்பாக  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால்  கடந்த ஆண்டு (07.03.2023) துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

College Student

மத்திய அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்

இந்நிலையில் 2023-24 க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. 

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் முடக்கம்; உலகம் முழுவதும் பாதிப்பு சரி செய்வது எப்படி? Microsoft விளக்கம்!

Latest Videos


மாதம் 7500 ரூபாய் ஊக்கத்தொகை

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1.000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25.000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 
 

வங்கி கணக்கில் 25ஆயிரம்

இதனைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (16.06.2024) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 

10க்கும் மேற்பட்ட சிம்கார்டா.? உங்கள் பெயரில் எத்தனை சிம் இருக்கு தெரியுமா.? எப்படி செக் செய்வது- இதோ லிங்க்
 

மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2024) யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc registration என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, 19.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என நான் முதல்வன் (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்புத் திட்ட இயக்குநர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 

click me!