தொடர் விடுமுறை! மாணவர்கள், பெற்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு! ஃபாலோ பண்ணுங்க!

Published : Apr 28, 2025, 08:27 AM IST

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.

PREV
14
 தொடர் விடுமுறை! மாணவர்கள், பெற்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு! ஃபாலோ பண்ணுங்க!

Tamilnadu School Holiday: தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. தலைநகர் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என பல்வேறு இடங்களில் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வருகிறது. இது ஒருபக்கம் இருக்க, தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

24
school holiday in Tamilnadu

தொடர் விடுமுறை 

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் வெளியில் சென்று ஜாலியாக விளையாடுவது வழக்கம். ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நண்பர்களுடன் குளித்து ஆட்டம் போடுவார்கள். மாணவர்களின் கவனக்குறைவு காரணமாக இதில் சில நேரங்களில் அசம்பாதவிதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இந்நிலையில், கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பில் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வீடு தேடி வரப்போகும் ரேஷன் பொருட்கள்! தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்!

34
Tamilnadu School Education

நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், ''மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின்போது அதிகளவு தண்ணீரை அருந்தச் செய்யுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிர்க்கவும். விடுமுறை நாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

பராம்பரிய உணவு வகைகள் 

அதன்படி தனிமை உணர்வுகளைத் தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் ஆகியவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும், மனநலனை பேணவும் முடியும். டிவி, செல்போன் ஆகியவற்றை பார்ப்பதில் அதிகமான நேரத்தை செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். எனவே, பராம்பரிய உணவு வகைகளை தரவேண்டும். கோடை காலத்துக்கு ஏற்ற பழவகைகளை வழங்க வேண்டும்.

44
Tamilnadu School Education Department

பொது நூலகங்களுக்கு செல்ல வேண்டும் 

இதுதவிர மாணவர்களை அருகில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கவும் அவர்களின் ஆர்வங்களை பொறுத்து காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், சிறார் கதைகள் மற்றும் நீதி நூல்களை படிக்கவும் அறிவுறுத்த வேண்டும். இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். தினமும் இருவேளை பல் துலக்கி, குளித்தல் போன்ற பழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும். பெரியோரை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்த சரண் விடுப்பு.! அசத்தலான அறிவிப்பை வெளியிட தேதி குறித்த அரசு

Read more Photos on
click me!

Recommended Stories