கிராம நிர்வாக ஆவணங்களின் பாதுகாப்பது, கிராமத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாத்தல். விளைநிலங்களை அளத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவுதல். பிறப்பு, இறப்பு, தற்கொலை, விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்றவற்றின் தகவல்களை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக அளித்தல்.
முதியோர் ஓய்வூதியம், சாதி, வருவாய், இருப்பிடம், வாரிசு சான்றிதழ்கள் வழங்குவதற்கு முன் உரியவர்களை விசாரித்தல் ஆகியவை முக்கிய பணியாக உள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் கிராம நிருவாகம் கிராம உதவியாளர்களை கிராம நிருவாக பணியினை தவிர இதர பணிகளுக்கும் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.