தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் தாயுமானவரின் "அன்பு கரங்கள்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தகுதிகள் என்ன.?
திட்டத்தில் பங்கு பெற ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்/பெற்றோர் இருவரால் கைவிடப்பட்டவர்கள்).
ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து / பெற்றோர் ஒருவரால் கைவிடப்பட்டு, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)
கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிடப்பட்டுச் சென்று இருப்பின்).
ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து / பெற்றோர் ஒருவரால் கைவிடப்பட்டு, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)