அதிகரிக்கும் மின்சார தேவை
அந்த வகையில் மருத்துவ கல்லூரிகள் , மாவட்ட மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்வெட்டு ஏற்படாத வகையில் சீரான மின்சார வினியோகம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடைகாலத்தில் தமிழகத்தின் அதிகபட்ச மின் நுகர்வு 20,830 மெகா வாட்டாக கடந்தாண்டு பதிவாகி இருந்தது ,
இந்தாண்டு மே மாதத்தில் 22 ஆயிரம் மெகாவாட் என்ற புதிய உச்சநிலையை அடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் மருத்துவமனைகளில் தடையின்றி என்ன மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட மின்வாரிய பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.