Madurantakam Dharapuram Bypolls: ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக.. திமுக, தவெக இடையே கடும் போட்டி! இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?

Published : Sep 08, 2026, 02:39 PM IST

Madurantakam Dharapuram Bypolls: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, தவெக இடையே கடும் போட்டி. கடந்த தேர்தல் வாக்குகள், அரசியல் பின்னணி மற்றும் வெற்றி கணக்கை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

PREV
112
மதுராந்தகம், தாராபுரம் யாருக்கு?

தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்புக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல். இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 9 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட உள்ளன. செப்டம்பர் 16 வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள். செப்டம்பர் 17 அன்று மனுக்கள் பரிசீலிக்கப்படும்.

212
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்

செப்டம்பர் 19 அன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் முடிகிறது. அக்டோபர் 9 அன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் என்றாலும், இதன் அரசியல் தாக்கம் தமிழக அளவில் கவனம் பெறும் வகையில் உள்ளது. குறிப்பாக சமீபத்திய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தல், அதிமுக, திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கு முக்கியமான களமாக மாறியுள்ளது.

312
அதிமுகவுக்கு சவால் கொடுக்கும் திமுக, தவெக

இந்த இரண்டு தொகுதிகளும் ஏன் காலியானது என்பதுதான் தற்போதைய தேர்தலின் பின்னணியில் இருக்கும் முக்கிய அரசியல் கதை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமாவும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் தவெகவில் இணைந்தனர்.

412
முக்கிய அரசியல் கணக்கு

ராஜினாமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து இரு தொகுதிகளும் காலியாகின. அதிமுக தரப்பில் கட்சித் தாவல் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது, நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அரசியல் பின்னணியிலேயே தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவு வெறும் ஒரு தொகுதி வெற்றி, தோல்வி என்ற அளவில் இல்லாமல், கட்சிகளின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாட்டையும் பாதிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

512
வேலைகளை தொடங்கிய இபிஎஸ்

தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே அதிமுக தனது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 10 வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்று சமர்ப்பிக்கலாம் என்று கட்சி அறிவித்துள்ளது.

612
அதிமுக கோட்டையை தக்க வைக்குமா?

இதன் மூலம் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றிய அதிமுக தீவிரமாக களமிறங்குவது தெளிவாக உள்ளது. ஆனால், இந்த தேர்தலில் அதிமுக எதிர்கொள்ளும் சவால் வேறுபட்டது. கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏக்கள் தற்போது தவெக பக்கம் இருப்பதால், அவர்களின் அரசியல் செல்வாக்கு எந்த அளவுக்கு வாக்குகளாக மாறும் என்பது முக்கிய கேள்வியாகியுள்ளது.

712
மதுராந்தகம் இடைத்தேர்தல்

மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் வரலாறு, இந்த இடைத்தேர்தலின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள உதவுகிறது. 1952-ல் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் ஆதிக்கம் இருந்தது. 1967-ல் திமுக முதன்முறையாக வெற்றி பெற்றது. அதன்பிறகு திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. 2026 தேர்தலில் அதிமுகவின் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

812
மதுராந்தகம் யாருக்கு?

தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் எழில்மலை 62,090 வாக்குகளும், திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகளும் பெற்றனர். மூன்று கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு நிலவரத்தைப் பார்க்கும்போது, ​​மதுராந்தகத்தில் தேர்தல் களம் எவ்வளவு போட்டியாக இருக்கிறது என்பது புரிகிறது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவுக்கு எதிராக தவெகவும் திமுகவும் வலுவான போட்டியை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

912
தாராபுரம் இடைத்தேர்தல்

தாராபுரம் தொகுதியின் அரசியல் கணக்கு அதிமுகவுக்கு எளிதானதாக இல்லை. 1951-ல் உருவான இந்தத் தொகுதி, பின்னர் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. இதுவரை நடைபெற்ற 17 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுகவும் அதிமுகவும் தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸும் பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. 2026 தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

1012
தாராபுரம் யாருக்கு?

திமுக வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், தவெக வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். கடந்த தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்து பார்த்தால் அதிமுக முன்னிலையில் உள்ளது. ஆனால், இடைத்தேர்தலில் வேட்பாளர் மாற்றம், உள்ளூர் அரசியல், கூட்டணி நிலவரம் மற்றும் வாக்காளர்களின் மனநிலை ஆகியவை மாறக்கூடியவை. எனவே தாராபுரத்திலும் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1112
தவெக, திமுகவின் வியூகம் என்ன?

மொத்தத்தில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பல கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய தேர்தலாக மாறியுள்ளது. அதிமுக தனது தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா, திமுக ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைத்து முன்னேறுமா, அல்லது தவெக தனது புதிய அரசியல் அடித்தளத்தை இந்த இரண்டு தொகுதிகளிலும் வலுப்படுத்துமா என்பதே முக்கிய எதிர்பார்ப்பு. குறிப்பாக தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களின் அரசியல் நகர்வுகள் இந்த தேர்தலில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்கப்படுகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு போட்டியின் தன்மை மேலும் தெளிவாகும்.

1212
அதிமுகவுக்கு சவால் கொடுக்கும் திமுக, தவெக

அதன்பிறகு கூட்டணி கணக்கு, தொகுதி வாரியான களப்பணி மற்றும் வாக்கு மாற்றங்கள் முக்கியத்துவம் பெறும். அதுமட்டுமின்றி 100 நாட்களை கடந்த முதல்வர் சி. ஜோசப் விஜயின் ஆட்சி குறித்த மதிப்பீடாகவும் இத்தேர்தல் அமையவுள்ளது. எனவே அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவு, இரண்டு தொகுதிகளின் வெற்றியை மட்டும் தீர்மானிக்காமல், தமிழக அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கும் ஒரு முக்கிய அரசியல் சிக்கலாக அமையலாம் என்று எதிர்பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories