New Ration card: புதிய ரேஷன் கார்டுக்கு கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை- அரசின் புது ரூல்ஸ் தெரியுமா?

Published : Sep 07, 2026, 05:39 PM IST

New Ration card: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு LPG கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமாக இல்லை என உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது.

PREV
14
ரேஷன் கார்டுக்கு கேஸ் ரசீது தேவையா?

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது LPG கேஸ் கனெக்‌ஷன் விவரங்கள் ஏன் முக்கியம்? என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது. குறிப்பாக, சில இடங்களில் கேஸ் சிலிண்டர் ரசீது கேட்கப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், தற்போது தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை இதுகுறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

24
விவரங்கள் சரிபார்ப்பு

தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது குடும்பத்தின் விவரங்கள், முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதற்குக் காரணம், ஒரே குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் இடம்பெறுகிறதா? குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வசிப்பிட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை நிர்வாக ரீதியாக சரிபார்ப்பதற்கு.

34
தற்போதைய பிரச்சனை என்ன?

சமீபத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த சிலரிடம் கேஸ் சிலிண்டர் ரசீதை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று சில இ-சேவை மையங்கள் மற்றும் உள்ளூர் அலுவலர்கள் கூறியதாக புகார்கள் எழுந்தன. இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் பலரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

44
உணவுப்பொருள் வழங்கல் துறை தரப்பில் விளக்கம்

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது LPG கேஸ் சிலிண்டர் ரசீதை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் சில இ-சேவை மையங்களில் கேஸ் ரசீது கட்டாயம் எனக் கூறப்பட்டதால் பொதுமக்களிடம் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

என்ன ஆவணங்கள் தேவை?

துறையின் விளக்கப்படி, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் விவரங்கள் முக்கியமாகப் பதிவேற்ற வேண்டும். அதன்பிறகு, குடும்பத்தின் முகவரியை (Address) உறுதிப்படுத்தும் ஆவணமாக சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்தப் பத்திரம், மின் கட்டண ரசீது அல்லது கேஸ் சிலிண்டர் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

60 நாட்கள் அவகாசம்

மேலும், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள், தேவையான ஆவணங்களை முழுமையாகச் சமர்ப்பித்திருந்தால், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்க அரசுக்கு 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது.

உதவி எண்

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது, ஏற்கனவே அளித்த விண்ணப்பத்தின் நிலையைப் பார்ப்பது, முகவரியை மாற்றுவது, குடும்பத்தில் புதிய உறுப்பினரைச் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைனிலேயே பயன்படுத்திக்கொள்ளலாம்.

குடும்ப அட்டை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால், 1967 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories