உயர்கல்வித் துறைக்கும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்விக்காக ரூ.8,393 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கல்லூரி மாணவர்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்பில் 'வெற்றி மடிக்கணினி திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது.அதேபோல், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை விரிவுபடுத்த கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.90 கோடி செலவில் 5 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ITI) அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, மாணவர் நலன் மற்றும் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளதால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுக, அதிமுகவுக்கு விஜய் வைத்த செக்! 16 தொகுதிகளில் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்..அலறும் அறிவாலயம்!