இந்நிலையில், திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரியம் இன்று ஆய்வு நடத்தியது. நவீன சாதனங்களைக் கொண்டு காற்றில் இருக்கக்கூடிய நச்சுதன்மை, வாயுக்களின் தரம் குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கையில் வாயு கசிவுக்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே, வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.