10ம் வகுப்பு படித்தாலே போதும்! தொழிலதிபராக சூப்பர் வாய்ப்பு.! தமிழக அரசின் சரவெடி அறிவிப்பு!

Published : Feb 17, 2026, 12:33 PM IST

18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது.

PREV
15
தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் என்னதான் மாதம் சம்பளத்துக்கு வேலை செய்து வந்தாலும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது பலரது கனவாக இருந்து வருகிறது. அந்த கனவை நினைவாக்க தமிழக அரசு சூப்பர் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

25
தொழில் முனைவோர்

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” - தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சி வரும் பிப்ரவரி 23 முதல் 27ம் தேதி வரை (அதாவது 5 நாட்கள்) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

35
திட்ட அறிக்கை தயாரித்தல்

இப்பயிற்சியில் தொழில்முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள் & அடிப்படைகள், சந்தைப்படுத்துதல் & பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள் -ERP Tally, ஜிஎஸ்டி, இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநில தொழில் கொள்கை, MSME வகைப்பாடு பதிவுகளைப் பற்றி விளக்கங்கள், ஆகியவை பற்றி விளக்கப்படும்.

45
எப்படி விண்ணப்பிப்பது?

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

55
முன்பதிவு அவசியம்

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.7010143022 / 8668102600 ஆகிய தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்பதிவு அவசியம் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories