கொளுத்தும் கோடை வெயில்! தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்?

Published : Apr 29, 2026, 08:26 AM IST

தமிழகத்தில் தேர்வுகள் மற்றும் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, இன்று சென்னை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
15
கோடை வெயில்

தமிழகத்தில் மழை மற்றும் குளிர் காலம் முடிந்து கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வீட்டில் எந்நேரமும் ஃபேன் மற்றும் ஏசி இல்லாமல் இருப்பதில்லை. இதன் காரணமாக மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சம் பெற்று வருகிறது.

25
மாதாந்திரப் பராமரிப்பு பணி

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.

35
மின்தடை அறிவிப்பு

இந்நிலையில் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு நடத்தப்பட்டதை அடுத்து இரண்டு மாதங்களுக்கு இனி மின்தடை இருக்கக்கூடாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக மின்தடையும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்று முதல் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

45
சென்னை

வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் ஐ.இ., போத்தூர், லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, டி.எச்.ரோடு, எடப்பாளையம் ரோடு, கன்னடபாளையம், காட்டூர், அரிக்கம்பேடு, காந்தி நகர் ஆகிய இடங்களில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.

55
கிருஷ்ணகிரி

நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி, கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி, பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories