விஜய் இரங்கல்- புஸ்ஸி ஆனந்த் கதறல்
இந்த சம்பவம் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இன்று காலை சரவணனின் உடலை பார்த்த புஸ்ஸி ஆனந்த கதறி, கதறி அழுதார். இதனையடுத்து சரவணின் குடும்பத்தாரிடம் தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார். தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.