இந்தச் சம்பவம் குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில், "புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சி ரௌடிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரௌடிகளை விட்டுவிட்டு, தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சித்த ஏர்போர்ட் மூர்த்தியைக் கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல்துறை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2006-2011 ஆட்சிக்காலத்தை விட, மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் அவரது மகன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்" என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.