ஆனால் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் சுற்றுலா பயணிகளால் திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் பாறைக்கு செல்வோர் அனைவரும் திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வரும் வகையில் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையில் ரூ.37 கோடி செலவில் கடல் நடுவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு
சுமார் 97 மீட்டர் நீளத்திலும், 10 அடி அகலத்திலும் கண்ணாடி கூண்டு பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் நடுப்பகுதியில் 2.4 மீட்டர் தடிமன் கொண்ட கண்னாடிகள் பதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று கடலின் அழகை ரசித்து வந்தனர்.