இதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 9:05 மணிக்கு நடைபெற்றது. ஆண்டாள், ரங்க மன்னார் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.