அந்த வகையில் திருநெல்வேலி – செங்கல்பட்டு இருவாராந்திர அதிவேக சிறப்பு ரயில்கள் (06156 / 06155) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் & புதன்) இயக்கப்படவுள்ளது. (ரயில் எண் 06156) (திருநெல்வேலி–செங்கல்பட்டு): திருநெல்வேலியிலிருந்து காலை 4.00 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை அடையும். (ரயில் எண் 06155) (செங்கல்பட்டு–திருநெல்வேலி): பிற்பகல் 3.00 மணிக்கு புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, தின்டுக்கல், திருச்சி, வில்லுப்புரம் உள்ளிட்ட இடங்கள் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிகள் வசதிக்காக 2 ஏசி 3-டயர், 1 ஏசி சேர்கார், 12 சாதாரண சேர்கார், 4 பொது வகுப்பு, 2 மாற்றுத் திறனாளி வண்டிகள் இணைக்கப்படும்.