தொடர் விடுமுறை- பொதுமக்கள் குஷி
இந்த சூழ்நிலையில் பெரும்பாலானோர் பேருந்து பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்யவே அதிக அளவு விரும்புவார்கள். அந்த வகையில் ரயில்களில் முன்பதிவானது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே முடிவடைந்துவிட்டது.
எனவே எப்போது சிறப்புயில்கள் இயக்கப்படும் என காத்திருந்த பொதுமக்களுக்கு தற்போது அசத்தலான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கும், சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கும், இதே போல சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்புரயிலானது இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.