TRB: சிறப்பு டெட் தேர்வு! காலை 9.30 தாண்டினால் நோ என்ட்ரி! பெல்ட், ஷூ-வுக்கு தடை... டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்!

Published : Jul 04, 2026, 08:18 AM IST

TET Exam: தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இதற்கான தேர்வு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

PREV
15
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு எழுத வேண்டிய ஒரு கட்டாயத் தகுதித் தேர்வாகும். அதுமட்டுமல்லாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2025-ம் ஆண்டு உத்தரவிட்டது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் அனைத்து ஆசிரியர்களும் தகுதி பெற வேண்டும். அப்படி தகுதி பெற விரும்பாதவர்கள் அவர்களுக்கான சலுகைகளுடன் ஓய்வு பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஓய்வுப்பெற 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொண்டவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது.

25
தமிழ்நாடு அரசாணை வெளியிடு

இந்த உத்தரவினால் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியை இழக்கும் சூழல் உருவானது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இதற்கான தேர்வு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

35
ஆசிரியர் தேர்வு வாரியம்

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026 நாள் 13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I இன்றும், தாள்-II நாளையும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. தாள்-I-க்கு 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் ஆண் தேர்வர்கள் 12,001, பெண் தேர்வர்கள் 49,385 ஆகும். இதில் 1,321 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இம்மாற்றுத்திறனாளிகளில் 126 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

45
கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

தாள்-II-க்கு 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் ஆண் தேர்வர்கள் 40,535 பெண் தேர்வர்கள் 1,27,208 ஆகும். இதில் 3,151 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இம்மாற்றுத்திறனாளிகளில் 601 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேர்வுகளைக் கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இயக்குநர் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் நிலையில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நாளன்று தேர்வர்கள் சார்ந்த தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வருகை புரிய வேண்டும். காலை 9.30 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தடை

குறிப்பாக தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு அறைக்குள் பெல்ட், ஷூ, ஹை ஹீல்ஸ், டிஜிட்டல் வாட்ச் அணியவும், செல்போன், மைக்ரோபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories