தேர்வில் காபி அடிக்க செம பிளான் போட்ட மாணவர்கள்.! ஜெராக்ஸ் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

Published : Mar 12, 2026, 01:58 PM IST

School Student: பள்ளி பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் முறையற்ற வழிகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

PREV
14
12ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல் நேற்று முதல் 10ம் வகுப்பு தேர்வு தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நெல்லையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பல்வேறு தேர்வு மையங்களில் மாணவர்களிடம் 'மினி ஜெராக்ஸ்' கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

24
தேர்வுத்துறை அதிரடி உத்தரவு

மாணவர்கள் பிட் அடிக்கும் நோக்கத்தில் மினி ஜெராக்ஸ் போட்டு அதனை சட்டை பையில் மறைத்து வைத்து தேர்வு எழுத சென்றுள்ளனர். மாணவர்களிடம் விசாரித்ததில், ஜெராக்ஸ் கடையில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அந்த ஜெராக்ஸ் கடைக்கு நேரடியாக சென்று எச்சரிக்கையும் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களுக்கு அருகே செயல்படும் ஜெராக்ஸ் கடைகளைத் தீவிரமாக கண்காணிக்க தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

34
ஜெராக்ஸ் கடைகள்

பள்ளி பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் முறையற்ற வழிகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்வு வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக, தேர்வு மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் ஜெராக்ஸ் கடைகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் மினி ஜெராக்ஸ் எடுக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

44
மினி ஜெராக்ஸ்

இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்குத் தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டுதலில், தேர்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில் திடீர் சோதனைகளை நடத்தவும், அங்கு பிட் அடிப்பதற்கு ஏதுவாக மினி ஜெராக்ஸ் எடுப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories