தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில், வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வந்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு முதல் விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.