மேலும் அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகை என தொடர்ந்து விடுமுறை வரிசைகட்டி வருகிறது. ஏற்கனவே தற்போது காலாண்டு தேர்வுகள் நிறைவு பெற்று அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறையானது வருகின்ற 6ம் தேதியுடன் நிறைவு பெற்று திங்கள் கிழமை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.