தேர்தல் முடியும் வரை கைது செய்ய முடியாது..! வெளியே வந்த சவுக்கு சங்கர்

Published : Dec 27, 2025, 01:37 PM IST

பணம் கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் 17 வழக்குகளில் 12 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து விடுதலையானார்.

PREV
15

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில், ஆளும் திமுக அரசுக்கு எதிரான விமர்சனம் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் காவல் துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

25

இந்நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்​நிலை​யில் சவுக்கு சங்​கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு​ ஒன்றை தாக்​கல் செய்​தார். அதில் எனது மகன் சவுக்கு சங்​கர் தமிழக அரசின் செயல்​பாடு​களை​யும், முறை​கேடு​களை​யும் விமர்​சித்து வரு​வ​தால் பழி​வாங்​கும் வித​மாக போலீசார் கைது செய்து வரு​கின்​றனர். எனது மகனுக்கு இருதய நோயும், நீரழிவு நோயும் உள்​ளது. ஆகையால் சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆகையால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

35

இதுதொடர்பான வழக்கு நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், பி.தன​பால் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சவுக்கு சங்​கர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் மு.​ராமமூர்த்​தி, “பழி​வாங்​கும் நோக்​கில் தொடர்ச்​சி​யாக கைது செய்து வரு​கின்​றனர். கடந்த டிசம்பர் 12-ம் தேதி மாலை திடீரென ஒரு தொகையை சவுக்கு சங்​கரின் அலு​வல​கத்​தில் பணிபுரி​யும் நபருக்கு ஜிபே மூல​மாக அனுப்​பி​விட்​டு எப்​ஐஆர் போட்​டு 13-ம் தேதி யாரையோ மிரட்​டிய​தாகக்​ கூறி கைது செய்​துள்​ளனர். அவருக்கு சிறை​யில் மருத்​துவ சிகிச்​சைகள் அளிக்​கப்​பட​வில்லை என வாதிட்​டார்.

45

இதனையடுத்து தமிழக அரசு மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது. பின்னர் அனைத்து தரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதிகள் அரசை விமர்​சிக்​கிறார் என்​ப​தற்​காக ஒரு நபரை குறி​வைத்து தொடர்ந்து கைது செய்து போலீ​சார் அதி​கார துஷ்பிரயோகத்​தில் ஈடு​படு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது. அவரை அடுத்​தடுத்து கைது செய்ய வேண்​டுமென்​கிற போலீ​சாரின் ஆர்​வம் சந்​தேகம் கொள்ள வைக்​கிறது.

காவல்​துறை​யின் இது​போன்ற செய்​கை​யால் தேவையற்ற பிரச்​சினை​கள் ஏற்​படு​கின்​றன. இதன்​மூலம் கருத்து சுதந்​திரம் மட்​டுமின்றி தனிமனித சுதந்​திர​மும் அப்​பட்​டமாக மீறப்பட்​டுள்​ளது. காவல்​துறை அதிகாரி​கள் தங்​களது கடமை​யில் இருந்து ஒரு​போதும் தடம் மாறக்​கூ​டாது. எனவே,சவுக்கு சங்கரின் உடல்​நிலை மற்​றும் மருத்​து​வக்காரணங்​களை கருத்​தில் கொண்டு அவர் மீது தற்​போது பதிவு செய்துள்ள 2 வழக்​கு​கள் உள்பட சென்​னை, காஞ்​சிபுரம், திருச்சி என பல்​வேறு இடங்​களில் பதி​யப்​பட்​டுள்ள 17 குற்ற வழக்​கு​களில் அவருக்கு மார்ச் 25-ம் தேதி வரை 12 வாரங்​களுக்கு நிபந்​தனை​களு​டன் இடைக்கால ஜாமீன் வழங்​கப்​படுவதாக தெரிவித்தார்.

55

தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கும் நோக்கில் சவுக்கு சங்கர் செயல்படக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினார். அதாவது சுமார் 90 நாட்களுக்கு சவுக்கு சங்கரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமின் வழங்கியதை அடுத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் புழல் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories