இதனையடுத்து தமிழக அரசு மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது. பின்னர் அனைத்து தரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதிகள் அரசை விமர்சிக்கிறார் என்பதற்காக ஒரு நபரை குறிவைத்து தொடர்ந்து கைது செய்து போலீசார் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவரை அடுத்தடுத்து கைது செய்ய வேண்டுமென்கிற போலீசாரின் ஆர்வம் சந்தேகம் கொள்ள வைக்கிறது.
காவல்துறையின் இதுபோன்ற செய்கையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன்மூலம் கருத்து சுதந்திரம் மட்டுமின்றி தனிமனித சுதந்திரமும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் தங்களது கடமையில் இருந்து ஒருபோதும் தடம் மாறக்கூடாது. எனவே,சவுக்கு சங்கரின் உடல்நிலை மற்றும் மருத்துவக்காரணங்களை கருத்தில் கொண்டு அவர் மீது தற்போது பதிவு செய்துள்ள 2 வழக்குகள் உள்பட சென்னை, காஞ்சிபுரம், திருச்சி என பல்வேறு இடங்களில் பதியப்பட்டுள்ள 17 குற்ற வழக்குகளில் அவருக்கு மார்ச் 25-ம் தேதி வரை 12 வாரங்களுக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.