ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன்: அதிமுகவை ஒன்றிணைக்க நான், நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சிவி சண்முகம் பொதுச்செயலாளர் சந்தித்தோம். ஆனால் அவர் ஏற்கும் மனநிலையில் இல்லை. வெளியே சென்றவர்களை அரவணைத்தால் தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்ஜிஆர் சொல்லிக் கொடுத்த பாடம். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள். அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். அவர்கள் அதிமுகவில் நிபந்தனையின்றி இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்தார்.