கோவையில் அத்திக் கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். ''எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் தான் நான் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தேன்'' என்று எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியை செங்கோட்டையன் வெளிக்காட்டியுள்ளார். ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரிகள் வரிசைகட்டி நிற்க, இப்போது அந்த பட்டியலில் செங்கோட்டையனும் சேர்ந்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமன்றி அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திராவும், ''கட்சியில் தனக்கு மதிப்பில்லை'' என்று கூறியிருப்பது எடப்பாடி பழனிசாமி அணியில் பிளவை அதிகரித்துள்ளது. மூத்த தலைவர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியதன் பின்னணியில் சசிகலா இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் சசிகலா மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் அதிக விசுவாசம் கொண்டவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்ட செங்கோட்டையன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் உருவெடுக்க முக்கிய காரணம் சசிகலா தான்.
கைது செய்யப்படுகிறாரா சீமான்? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!