இந்நிலையில், ஆறுமுகம், தன்னுடைய மனைவியையும், மகன் சிவசுதாகரையும் அழைத்துக்கொண்டு துணி எடுப்பதற்காக காஞ்சிபுரத்திற்கு சென்றிருக்கிறார். துணி வாங்கி முடித்ததுமே, மனைவியையும் குழந்தையையும் பார்ப்பதற்காக செய்யாறுக்கு சிவசுதாகர் கிளம்பினார். மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு தன்னுடைய நண்பர் சஞ்சய் என்பவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு செய்யாறில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.