ரெட் அலர்ட்
ஃபெஞ்சல் காரணமாக தமிழகம், புதுவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ள நிலையில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும் என்பதற்கான ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ராணிபேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமழை முதல் கனமழை (Heavy Rain) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.