ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறந்தள்ளிய திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் ரகுபதி, ''திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கருத்துகளையும் எடுத்து வாதாடியுள்ளது.
சுடுகாட்டில் தான் பிணங்களை எரிப்பார்கள்
ஒரு இடத்தில் இதுதான் நடக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் அதுதான் நடக்கும். சுடுகாடு இருக்கிறது என்றால் கிராமங்களில் அந்த இடத்தில் தான் பிணங்களை எரிப்பார்கள். அதற்கு பதிலாக வேறு எந்த இடத்திலும் எரிக்க மாட்டார்கள். அதெல்லாம் பழக்கவழக்கங்கள் தான். ஆகவே அந்த பழக்கவழக்கங்களை மாற்றாதீர்கள்.
இதுவரை தீபம் ஏற்றப்படாத இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனக்கூறி ஏன் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறீர்கள் என்பது தான் எங்களின் கேள்வி. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது'' என்று கூறியுள்ளார்.