தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவராகவும், பாமக மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். மேலும் வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார். ராமதாஸின் தீவிர ஆதரவாளர். கடந்த 5ம் தேதி ஆதரவாளர்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த 8 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியது. மேலும், நாட்டு வெடி குண்டுகளையும் வீசியது. இதில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் ம.க.ஸ்டாலின் அங்கிருந்து எப்படியோ எஸ்கேப்பாகி உயிர் தப்பினார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.