Published : Sep 13, 2025, 12:12 PM ISTUpdated : Sep 13, 2025, 12:33 PM IST
திருச்சி மாவட்டம் முசிறி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர் நாகராஜன், மாற்றுத்திறனாளி மாணவியிடம் ஆபாசமாகப் பேசியதாக புகார் எழுந்துள்ளது. 9 நிமிட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் நாகராஜன்(52). இவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17வயது மாற்றுத்திறனாளி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
24
கல்லூரி மாணவி
அதில் உன்ன எனக்கு பிடிக்கும். அதனால் உன்கிட்ட மட்டும்தான் நான் கேட்க முடியும். இருப்பியா? மாட்டியா?... அத மட்டும் சொல்லு. உன்கிட்ட இருக்கிற எல்லா விசயமும் எனக்கு கிடைக்குமா? கிடைக்காதா? உன்னை கட்டி பிடிக்க கூடாது, முத்தம் கொடுக்கக் கூடாது என்றால் எதுக்கு பழகணும் சொல்லு என்று செல்போனில் அந்த மாணவிகளிடம் பேராசிரியர் கேட்கிறார். பேராசிரியர் நாகராஜனுக்கும், மாணவிக்கும் இடையே உரையாடல் 9 நிமிடம் 36 செகண்ட் தொடர்கிறது.
34
பேராசிரியர் நாகராஜனிடம் விசாரணை
இதுதொடர்பாக, அரசு கலைக் கல்லூரி முதல்வர் கணேசன் மற்றும் கல்லூரி உள் விவகார விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்கள் அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் நாகராஜனிடம் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் தமிழ் துறை பேராசிரியரின் தவறு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கணேசன் தெரிவித்தார். இதையடுத்து, துறைரீதியான விசாரணை அறிக்கையை கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் அனுப்பிவைத்தார். அதன்பேரில், பேராசிரியர் நாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.