தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகளை அரசு எடுத்து நடத்தி வருகிறது. இதில் வரும் வருமானத்தில் தான் அரசு இயந்திரமே இயங்குவதாகவே கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கோடிக்கும், வார இறுதி நாட்களின் ரூ.200 கோடி அளவுக்கும் விற்பனை நடைபெறுகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கலையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் இது கடந்த ஆண்டை விட ரூ.47 கோடி அதிகம் என அன்புமணி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.