மோசடி எவ்வாறு செயல்படுகிறது:
தீபாவளி போன்ற பண்டிகைக் கால ஷாப்பிங்கை குறிவைத்து இந்த மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பதாகக் கவர்ச்சிகரமான மற்றும் லாபகரமாக விளம்பரங்களை போலியாக வடிவமைக்கின்றனர். மேலும் மக்களை கவர்ந்து இழுக்கும் வகையில் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது கைப்பேசி அழைப்பு மூலமாகவோ தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி எமாற்றுகிறார்கள்.
அவ்வாறு தொடர்பு கொள்ளும் பொழுது (www.kannancrackers.in, www.sunrisecrackers.com) பட்டாசுகளை வாங்க அறிவுறுத்துகின்றனர். இந்த இணையத்தளங்கள் வெளிதோற்றத்தில் காண்பதற்கு உண்மையானது போல தோன்றினாலும் இவை பணத்தைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்டவை ஆகும். இவை பெரும்பாலும் உண்மையான தோற்றமுடைய தயாரிப்புபட்டியல்கள், விலைகள் மற்றும் பணம் செலுத்தும் விருப்பங்களைக் காண்பிக்கும்.