பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் உச்சம் பெற்றுள்ளது. இருவரும் பாமகவுக்கு தாங்களே தலைவர் என்று கூறிவரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து மாற்றப்படுவது அக்கட்சியினர் இடையே மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாமக இரண்டாக உடையும் சூழல் நிலவி வருவதால் அக்கட்சி தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் திடீரென டெல்லி சென்றுள்ள அன்புமணி, அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையத்தை அணுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.