“இன்று ரூ.4,900 கோடி மதிப்பில் ரயில்வே, எரிசக்தி, சாலைகள், விமான நிலையம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறிக்கொண்டே வருகிறது.” என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக அரசு சார்பில் கலந்துகொண்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டத்தின் மாதிரியை நினைவுச்சின்னமாக வழங்கினார்.
விழா முடிந்த பிறகு, இரவு 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவர் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.