பிளாட்பார்ம் டிக்கெட் தேவையில்லை.! ரயில்வே துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Published : Oct 29, 2024, 08:06 AM ISTUpdated : Oct 30, 2024, 11:19 AM IST

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை ரத்து செய்யப்படுகிறது.

PREV
14
பிளாட்பார்ம் டிக்கெட் தேவையில்லை.! ரயில்வே துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

ரயில் பயணம்

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வது ரயில் போக்குவரத்து முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள்.  120 நாட்களுக்கு முன்னதாகவே ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து திட்டமிட்டு பயணம் செய்வார்கள். அந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத போக்குவரத்தாக ரயில்வே துறை உள்ளது. இந்தநிலையில் விஷேச நாட்களில் கூடுதல் ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது.   அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து மட்டுமல்ல நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது.

24
train ticket

சிறப்பு ரயில் இயக்கம்

அந்த வகையில் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இருந்தும் கோவை, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் சிறப்பு ரயில்கள் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 4 நாட்களும், புதுச்சேரியில் 5 நாட்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை தொடர்ந்து சுற்றுலா செல்லவும் பொதுமக்கள் செல்வதற்காக தயாராகிவருகின்றனர். இந்தநிலையில் சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு இன்று முதல் சிறப்பு ரயில் சேவை தொடங்கவுள்ளது. 

34

பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை

இதன் காரணமாக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்நிலையங்களில் கூடுவார்கள். மேலும் ரயில் பயணிகளை ரயில்களில் ஏற்றிவிட உதவியாக உறவினர்களும் வருவார்கள். எனவே பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்தால் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் வரும் நிலை உள்ளது. எனவே இதற்காக நீண்ட வரிசையில் நின்று பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ரயில்களை தவற விட வேண்டிய நிலையும், கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையும் ஏற்படும் சூழல் உருவானது. இதனை கருத்தில் கொண்டு சூப்பரான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன் படி, நாள்தோறும் எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து வெளியூருக்கு 3 லட்சம் பேர் பயணம் செய்வார்கள்.
 

44

சலுகை வழங்கிய ரயில்வே துறை

தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 50 சதவிகிதம் பேர் வரை ரயிலில் பயணிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த கூடுதல் ஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  மேலும் ரயிலில் பயணம் செய்வோரை வழியனுப்ப வரும் நபர்கள் கட்டாயம் பிளாட்பார்ம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் சமயத்தில் இதனை தடுக்க சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் அக்டோபர் 29,30 ஆகிய தேதிகளில் பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகள் நெரிசல் இன்றி பயணிக்க, இது உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்கள், மருத்துவ தேவையுள்ள பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories