வைகாசி விசாக தினமான மே 30 அன்று அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்படும் என்றும், விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளல், தங்க ரத வீதி உலா மற்றும் “முனி குமாரர்களுக்கு சாப விமோசனம்” போன்ற முக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக கூடுதல் குடிநீர், பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் கூட்டநெரிசல் கட்டுப்பாட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. விடுமுறை நாட்கள் மற்றும் விழா காரணமாக நீண்ட நேர காத்திருப்பு இருக்க வாய்ப்புள்ளதால், அதிகாலை நேரத்திலேயே கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.