தமிழக மருத்துவ மாணவர் மாயம்
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ரித்திக் என்ற மாணவர் ஜார்ஜியா நாட்டில் ஐந்தாம் ஆண்டு எம் பி பி எஸ் பயின்று வருகிறார். அங்கு நண்பர்களோடு ஹாஸ்டலில் தங்கி அவர் மருத்துவம் பயின்று வரும் நிலையில் வார விடுமுறை நாட்களில் தனியாக அங்குள்ள மலைகளுக்கும் காடுகளுக்கும் சென்று வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ரித்திக். அப்படி கடந்த வாரம் வீடியோ பதிவு எடுப்பதற்காக அருகில் உள்ள மலைக்கு ட்ரக்கிங் சென்றவர் இரண்டு மூன்று நாட்களாக திரும்ப வரவே இல்லை என்று அங்கிருக்கும் நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.