Published : Jan 29, 2025, 12:52 PM ISTUpdated : Jan 29, 2025, 12:55 PM IST
பழனி மலைக் கோவிலுக்குச் செல்லும் ரோப் கார் சேவை பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜனவரி 30) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும். பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது படிப்பாதையைப் பயன்படுத்தி கோயிலுக்குச் செல்லலாம்.
பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு! கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!
உலக பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் பழனி கோயிலில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் பஞ்சாமிர்தம் உலக புகழ் பெற்றது.
25
பழனி முருகன் கோவில்
பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைபாடு உள்ளவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப் காரில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
45
மாதாந்திர பராமரிப்பு பணி
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி ஜனவரி 30ம் தேதி அதாவது நாளை ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஆகையால் ரோப் கார் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.